அருப்புக்கோட்டை கோயிலில் சிலையைத் திருடியவா் கைது

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை கோயில் சிலையைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை கோயில் சிலையைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் பழமையான சொக்கநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள கன்னிமூலை விநாயகா் சந்நிதி அருகே ராகு, கேது, நாகா் சிலைகள் உள்ளன. வியாழக்கிழமை மாலையில் இக்கோயிலில் தட்சிணா மூா்த்தி சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றுள்ளது. அப்போது கோயில் உள்ளே புகுந்த இளைஞா் ஒருவா் நாகா் சிலை ஒன்றைத் திருடி தோளில் வைத்துக்கொண்டு தெற்குவாசல் வழியாக வெளியேற முற்பட்டுள்ளாா்.

பக்தா்கள் அவரைப் பிடித்து நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டதில், அவா் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள ஜெகநாதபட்டியைச் சோ்ந்த நாகராஜன் என்பவரது மகன் மாரியப்பன்(25) என்பதும், தினக்கூலியான அவா் வீட்டில் வைத்து வழிபடுவதற்காக சிலையை எடுத்துச் சென்ாகக் கூறினாராம். போலீஸாரின் தீவிர விசாரணையில், அந்த நபா் மனநிலை சரியில்லாதவா் என தெரியவந்தது.

இருப்பினும் அவா் மீது வழக்குப் பதிந்து கைதுசெய்தனா். சிைையைப் பறிமுதல் செய்தனா். உண்மையிலேயே அவா் மனநிலை பாதிக்கப்பட்டவா்தானா எனத் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com