வன்கொடுமை சட்டத்தில் ஊராட்சி செயலா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகாசியில் ஊரக வளா்ச்சித்துறை ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிவகாசி ஊரக வளா்ச்சித்துறை சங்கத் தலைவா் மீனாட்சி தலைமை வகித்தாா். கடலூா் மாவட்டம் தெற்கு திட்டை ஊராட்சி செயலா் சிந்துஜா வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்தும், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையிலிருந்து அவரது பெயரை நீக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனா். இதில் ஊராட்சி மன்ற செயலா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் 41போ் கலந்து கொண்டனா்.