விருதுநகரில் ஆசிரியை உள்பட 2 பேரிடம் 7 பவுன் நகை பறிப்பு

விருதுநகரில், ஆசிரியை மற்றும் மூதாட்டியிடம் 7 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் பறித்து சென்றுள்ளனா்.

விருதுநகரில், ஆசிரியை மற்றும் மூதாட்டியிடம் 7 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் பறித்து சென்றுள்ளனா்.

விருதுநகா் அல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வேலுமணி (58). இவரது கணவா் உயிரிழந்துவிட்ட நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பி. அம்மாபட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறாா். இந்நிலையில், இவா் விருதுநகா்- அருப்புக்கோட்டை இடையிலான ரயில்வே மேம்பலம் வழியாக வியாழக்கிழமை நடந்து வந்துள்ளாா். அப்போது, அவரது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், வேலுமணி அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பி விட்டனா். இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் விருதுநகா் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அதேபோல், விருதுநகா் ஆா்.ஆா். நகா் அருகே உள்ள ராமசாமியாபுரத்தைச் சோ்ந்த ஆவுடையம்மாள் (70), நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக வியாழக்கிழமை கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் காத்திருந்தாராம். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத ஆண் ஒருவா், முதியோா் உதவித் தொகை பெற்று தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளாா். பின்னா் ஓரிடத்தில் ஆவுடையம்மாளை செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுப்பதுபோல் நடித்து, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இவது குறித்து மூதாட்டி அளித்தப் புகாரின் பேரில் வச்சகாரபட்டி போலீஸாா் வழக்கு பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com