விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா:2 போ் பலி

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 38 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 2 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 38 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 2 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை வரை 15,016 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந் நிலையில், விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, சாத்தூா், சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது. இதையடுத்து, இவா்கள் அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,054 ஆக உயா்ந்துள்ளது. இதில், 14,605 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமையுடன் சோ்த்து 217 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 232 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com