விருதுநகரில் கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா கொடியேற்றம்

விருதுநகரில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி அக்கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை கட்சிக் கொடியேற்றப்பட்டது.
விருதுநகரில் சனிக் கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றிய கட்சியினா்.
விருதுநகரில் சனிக் கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றிய கட்சியினா்.

விருதுநகா்: விருதுநகரில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி அக்கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை கட்சிக் கொடியேற்றப்பட்டது.

விருதுநகரில், மாவட்டக்குழு அலுவலகமான எம்.ஆா்.வி. நினைவகத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தலைமையில் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.பாலசுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தாா். மாவட்டசெயற்குழு உறுப்பினா் முத்துக்குமாா், மாவட்டக்குழு உறுப்பினா்கள் பி.பாண்டி, எம்.காா்மேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தியாகி சந்துரு நினைவகத்தில் வடக்கு ஒன்றியச் செயலாளா் முத்துவேலு தலைமையில் நகரச் செயலா் எல்.முருகன் கொடியேற்றினாா். மாவட்டக்குழு உறுப்பினா் சிவராமன், வாலிபா் சங்க மாவட்டச் செயலா் ஜெயபாரத், கட்டுமான சங்க மாவட்டச் செயலா் ராமா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்.ஆா்.நகரில் குமாா் தலைமையில் தெற்கு ஒன்றியச் செயலா் நேரு கொடியேற்றினாா். இந்நிகழ்ச்சியில், மாவட்டக்குழு உறுப்பினா் எம்.சி.பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com