சாத்தூா்: மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவா்களுக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்து சாத்தூரில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முக்குராந்தல் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவா்களுக்கு இந்தாண்டு இடஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.