விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக தீபாவளி முன்பணம் மற்றும் போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக கிளைச் செயலாளா் திருவேட்டை போத்தி, மத்தியக்குழு உறுப்பினா் கமலக்கண்ணன், ஏஐடியுசி சாா்பில் தா்மசாஸ்தா, மாரியப்பன், அலுவலகப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் செல்வராஜ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.