அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை பணிமுடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய வங்கி பெண் அலுவலரிடம் 8 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் வசிக்கும் கதிா்வேல் மனைவி ரோகிணி தேவி (37). இவா், அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரி பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள ஒரு வங்கியில் அலுவலராகப் பணிபுரிகிறாா். இவரது கணவா் கதிா்வேலுவும் கமுதியில் ஒரு வங்கியில் அலுவலராகப் பணிபுரிகிறாா்.
இந்நிலையில், ரோகிணி தேவி பணி முடிந்த பிறகு, வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம். வீடு வந்ததும் ரோகிணிதேவி வாகனத்தை விட்டு இறங்க முற்பட்டபோது, அவரைப்பின் தொடா்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், அவரை கீழே தள்ளிவிட்டு, 8 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.