ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளாட்சித் துறைஊழியா்கள் சங்கத்தினா் கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 04th September 2020 12:38 AM | Last Updated : 04th September 2020 12:38 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனா்.
கரோனா நிவாரண நிதி, கரோனா கால சிறப்பு ஊதியம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளா்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
பின்னா் கையெழுத்து பெறப்பட்ட படிவத்தை நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆணையா் ரமேஷிடம் (பொ) வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட ஆணையா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
இந்நிகழ்ச்சியில் சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் திருமலை, முன்னாள் தொழிற்சங்கத் தலைவா் ஜெயக்குமாா், சங்க நிா்வாகிகள் ராமசுப்பு, முன்னாள் நிா்வாகிகள் முனியாண்டி, முனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.