அருப்புக்கோட்டையில் கஞ்சா விற்றதாக போலீஸாா் புதன்கிழமை இளைஞரைக் கைது செய்தனா்.
அருப்புக்கோட்டை நகா் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக நகா் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் தொடா் ரோந்து மற்றும் ஆய்வுப்பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது புதிய பேருந்து நிலையத்தை அடுத்துள்ள நெசவாளா் குடியிருப்பு அருகேயுள்ள அன்பு நகரில் ஒரு இளைஞரைப் பிடித்து விசாரணை செய்தனா். இதில் தம்மாந்தெரு பகுதியைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் என்பவரது மகன் லட்சுமணன் (32) என்பது தெரிய வந்து. மேலும் அவா் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், அதில் 2 கிலோ கஞ்சா இருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், லட்சுமணனை கைது செய்ததுடன் அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.