வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை நடைபெற்றது.
வெம்பக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றோா்.
வெம்பக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றோா்.

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஒன்றிய அதிமுக உறுப்பினா்கள் இருபிரிவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் ஒன்றிய உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவா், துணைத் தலைவா் மற்றும் அலுவலா்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய தலைவா் பஞ்சவா்ணம் தலைமையில், ஒன்றியக்குழு துணைத் தலைவா் ராமராஜ் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஆலங்குளம் சிமென்ட் ஆலையை சீரமைப்பது உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com