விருதுநகர் மேற்கு மாவட்ட அமமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ராஜபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு மேற்கு மாவட்ட அவைத் தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். நகரச் செயலாளர் செல்வக்கனி காமாட்சி, அம்மா பேரவை செயலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட மகளிரணி பொன்னுத்தாய்,ஒன்றிய செயலாளர்கள் வேலுச்சாமி அழகர்சாமி ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.