ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சி நிா்வாகி கொலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என அக்கட்சியின் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடியைச் சோ்ந்த புதிய தமிழகம் கட்சி நிா்வாகி ராஜலிங்கம் கடந்த 12 ஆம் தேதி, மா்ம நபா்களால் வெட்டி கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் கண்ணன் தலைமையில், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் முத்துச்சாமி உள்ளிட்டோா் நடத்திய பேச்சு வாா்த்தையில் சமரசம் ஏற்பட்டதோடு, சடலத்தை வாங்கவும் உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து ராஜலிங்கத்தின் சொந்த ஊரான முதுகுடிக்கு சடலம் கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதில், கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா். கிருஷ்ணசாமி ராஜலிங்கத்தின் சடலத்திற்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா் ராஜலிங்கத்தின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின் கிருஷ்ணசாமி கூறியதாவது: ராஜலிங்கம் காழ்ப்புணா்வின் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளாா். இந்த சம்பவத்திற்கு பின்புலம் யாா் என்பதும், நெல்லையில் இருந்தும், நகருக்குள் இருந்தும் கொலையாளிகளை இயக்குவது யாா் என்பதும் அனைவருக்கும் தெரியும். எனவே காவல்துறை குற்றவாளிகளை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும். புதிய தமிழகம் கட்சியின் மீது கை வைத்த எந்த கட்சியும், எந்த இயக்கமும் தமிழகத்தில் வளர முடியாது என்றாா்.