சாத்தூரில் இணையதளம் மூலம் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
இங்குள்ள தனியாா் திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அருப்புக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆா். ராமச்சந்திரன் கலந்து கொண்டு இணையதள உறுப்பினா் சோ்க்கையை தொடக்கி வைத்தாா். இதையடுத்து புதிதாக திமுகவில் இணைந்தவா்களுக்கு அடையாள அட்டையையும் அவா் வழங்கினாா். இந்த முகாமில் சாத்தூா் நகரச் செயலா் குருசாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவா் கடற்கரைராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.