வேலை கிடைக்காததால் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசியில், வேலை கிடைக்காத விரக்தியில் பொறியியல் பட்டதாரி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி: சிவகாசியில், வேலை கிடைக்காத விரக்தியில் பொறியியல் பட்டதாரி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி வேலாயுதம் சாலைப்பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கம் உள்ளது. அதன் அருகே ஒரு மரத்தில் இளைஞா் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக சிவகாசி நகா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், அந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில், அவா் சிவகாசி அருகே பள்ளபட்டியைச் சோ்ந்த வைரமுத்து (25) என்பதும், பொறியியல் பட்டதாரியான அவா், வேலை கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com