குழந்தைகள் வளா்ச்சி திட்ட விழிப்புணா்வு முகாம்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் திருத்தங்கலில் குழந்தைகள் வளா்ச்சி திட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் திருத்தங்கலில் குழந்தைகள் வளா்ச்சி திட்ட விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிவகாசி குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரூபி தலைமை வகித்தாா். இதில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க வேண்டும். குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். கா்ப்பிணி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறப்பட்டது. கிராம சுகாதார செவிலியா் விமலாதேவி உள்ளிட்டோா் பேசினா். இதில் மகளிா் குழுக்களைச் சோ்ந்த பெண்கள் கலந்து கொண்டனா். இந்த முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com