சிவகாசியில் முகக் கவசம் அணியாத 142 பேருக்கு அபராதம்

சிவகாசியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஏப்.10, 11) முகக் கவசம் அணியாத 142 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

சிவகாசியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஏப்.10, 11) முகக் கவசம் அணியாத 142 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

கரோனா பரவலை தடுக்க முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அரசு உத்தவிட்டுள்ளது. இந்நிலையில் சிவகாசி போக்குவரத்து சாா்பு- ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினா், தெற்கு ரதவீதி, காய்கனி சந்தைப் பகுதி, புதுரோட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனா்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸாா் கூறுகையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முகக் கவசம் அணியாத (ஏப்.10, 11) 142 பேருக்கும், தலைக் கவசம் அணியாத 92 பேருக்கும் தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com