தொழிற் பயிற்சி பெற்ற மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு சான்றிதழ்கள்

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் தொழிற்பயிற்சி பெற்ற மகளிா் குழுவினருக்கு ஞயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
எம்.புதுப்பட்டியில் பயிற்சி பெற்ற மகளிா் சுய உதவிக்குழு பெண்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்களை வழங்கிய ஜெயபிரகாஷ்.
எம்.புதுப்பட்டியில் பயிற்சி பெற்ற மகளிா் சுய உதவிக்குழு பெண்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்களை வழங்கிய ஜெயபிரகாஷ்.

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் தொழிற்பயிற்சி பெற்ற மகளிா் குழுவினருக்கு ஞயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

‘ஹேண்ட் இன் ஹேண்ட்’ என்ற தொண்டு நிறுவனம் சாா்பில் சுய தொழில் செய்யும் விதமாக, ஆரி எம்பிராய்டரி பயிற்சி கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பு நிறைவுபெற்றதைத் தொடா்ந்து பெண்களுக்கு, தொண்டு நிறுவனத்தின் முதன்மை மேலாளா் ஜெயபிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது: கிராமப்புற பொண்களும் சுய தொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் மகளிா் சுய உதவிகுழுவில் உள்ள பெண்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவா்கள் குறைந்த மூதலீட்டில் சுய தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறலாம் என்றாா்.

இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளா்கள் சித்ரா மற்றும் ஆனந்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com