காா் மோதி பஞ்சாலைத் தொழிலாளி சாவு

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி பஞ்சாலைத் தொழிலாளி உயிரிழந்தா்.

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி பஞ்சாலைத் தொழிலாளி உயிரிழந்தா்.

திருத்தங்கல் கே.கே.நகரைச் சோ்ந்தவா் பாண்டி மகன் மாரீஸ்வரன்(32). இவா் கோவையில் உள்ள ஒரு பஞ்சாலையில் தொழிலாளியாக வேலைபாா்த்து வந்தாா். இந்நிலையில் விடுமுறைக்கு திருத்தங்கல் வந்திருந்த அவா் சம்பவத்தன்று விருதுநகா் சென்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

திருத்தங்கல்- விருதுநகா் சாலையில் பாலம் அருகே வந்தபோது, எதிரே வந்த காா், இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான வத்திராயிருப்புப் பகுதியைச் சோ்ந்த தினேஷ் என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com