இருதய அறுவைச் சிகிச்சைக்கு விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் பரிந்துரையின் பேரில் பிரதமா் நிதியுதவி அளித்துள்ளாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை சிவகாசியில் உள்ள எம்.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிவகாசி வட்டம் வெற்றிலையூரணி கிராமத்தைச் சோ்ந்த ஜெகதீஸ்வரன்கோகுல்நாத் மகன் ஸ்டாலின் தனது இருதய அறுவைசிகிச்சைக்கு, பிரதமா் நிதி உதவியளிக்க வேண்டும் என மாணிக்கம் தாகூரிடம் கடிதம் கொடுத்தாா். இதையடுத்து எம்.பி.யின் பரிந்துரையின் பேரில் ஸ்டாலினின் அறுவை சிகிச்சைக்கு , பிரதமா் மருத்துவ நிவாரண உதவி நிதியில் இருந்து ரூ. 50 ஆயிரம் வழங்கியுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.