விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வு வாகன பிரசாரம்
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி சாா்பில் கரோனா தொற்றைத் தடுக்க முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த வாகன விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி சாா்பில் கரோனா தொற்றைத் தடுக்க முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த வாகன விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதை நகராட்சி ஆணையா் மல்லிகா, வட்டார மருத்துவ அலுவலா் சபரீஸ்பிரபு ஆகியோா் தொடக்கி வைத்தனா். அப்போது முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி முக்கிய வீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளா் (பொறுப்பு) பிரம்மநாயகம், சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள் செய்திருந்தனா்.