சிவகாசியில் சமையல் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
சிவகாசி - சாத்தூா் சாலையில் உள்ள நகராட்சி மயானத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பாா்த்தபோது, ஒரு ஆண் சடலம் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தது தெரியவந்தது. தொடந்து போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் சிவகாசி பாரதி நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்த சமையல் தொழிலாளி சேகா் (61) என்பது தெரியவந்தது.
இது குறித்து அவரது மனைவி சரோஜா அளித்தப் புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.