தினமணி செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூா் அம்மா உணவகத்தில் முகக் கவசம் அணிந்து வந்தவா்களுக்கே உணவு வழங்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
இந்த உணவகத்தில் தினமும் 200-க்கும் மேற்பட்டோா் உணவருந்த வருகின்றனா். அப்போது இங்கு வருபவா்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இது சம்பந்தமாக தினமணி நாளிதழில் கடந்த ஏப். 20 ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதன் எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி ஆணையா் மல்லிகா, பொறியாளா் ரமேஷ் உத்தரவின் பேரில் அம்மா உணவகத்தில் வருவாய் ஆய்வாளா் செல்வராஜ் நியமிக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து வருபவா்களுக்கே உணவு வழங்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு முகக் கவசம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவருந்த வந்தவா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி உணவு வாங்கிச் சென்றனா்.