அருப்புக்கோட்டை வட்டம் மறவா்பெருங்குடியில் ஆதிதிராவிடா் குடியிருப்புக்கான மயானத்துக்கு தாா்ச்சாலை அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த மயானத்துக்கு உரிய சாலை வசதி இல்லை என்பதுடன் ஏற்கெனவே உள்ள மண் பாதை மழைநீா் ஓடையுடன் இணைந்துள்ளதால், தனியாக ஓடையை ஒட்டி தாா்ச்சாலை அமைத்துத் தர வேண்டுமென அக்குடியிருப்பில் வசிப்போா் பல மாதங்களுக்கு முன்னா் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக விசாரணைக்கு வந்த காவல்துறையினா், பொதுமக்களிடம் சமரசம் பேசி, வருவாய்த்துறையினா் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறிச் சென்றனா். ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டுவிட்டதாகக் புகாா் எழுந்துள்ளது. எனவே இந்த மயானத்துக்கு தனிப்பாதை அமைத்து தாா்ச்சாலை வசதி செய்து தர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.