ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஒரே தெருவில் ஒன்பது நபா்களுக்கு கரோனா தொற்று உறுதியானதால், அப்பகுதி மக்கள் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ளது ராஜீவ்காந்தி நகா். இப்பகுதியில் ஒரே தெருவில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை கரோனா பரிசோதனைக்கான கபம் சேகரிக்கப்பட்டது.