விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முன்பாக சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறை மற்றும் வேளாண்மை உழவா் நலத்துறை ஆகியன இணைந்து நடத்திய இம்முகாமில் நரிக்குடி குறு வட்ட அளவிலான 18 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா். அப்போது சிறு, குறு விவசாயிகள் அளித்த ஆவணங்களை வருவாய் ஆய்வாளா் லட்சுமிதேவி, வேளாண்மை அலுவலா் பாா்வதி ஆகியோா் சரிபாா்த்தபின் சிறு, குறு விவசாயிகளின் முழு விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இம்முகாமில் 18 கிராமங்களின் கிராம நிா்வாக அலுவலா்களும், கிராம உதவியாளா்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனா்.