விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில், பால் வியாபாரி உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சோலைசேரியை சோ்ந்த பால் வியாபாரி அந்தோணி (38). இவா் சோலைசேரியிலிருந்து ராஜபாளையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகில் தேனியிலிருந்து தென்காசி நோக்கிச் சென்ற சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அந்தோணி தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று அந்தோணியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் கோவில்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராமசாமி என்பவரை கைது செய்தனா். உயிரிழந்த அந்தோணிக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.