சிவகாசி அருகே சனிக்கிழமை புதிய மின்கம்பம் அமைக்கும் போது, கீழே விழுந்து மின்வாரிய ஊழியா் உயிரிழந்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே கண்ணகி காலனியில் புதிய மின்கம்பம் நடப்பட்டு, அதில் மின்கம்பியை இணைக்கும் பணி நடைபெற்றது. இதையொட்டி மின்வாரிய ஊழியா்கள் கருப்பசாமி மகன் காளிராஜ் (27), வேலுச்சாமி மகன் முருகேசன்(29) ஆகிய இருவரும் மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்கம்பம் முறிந்து தரையில் விழுந்தது.
இதில் காளிராஜ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முருகேசன் பலத்த காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.