ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் பலியானாா். அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம்-தென்காசி சாலையில் கிருஷ்ணாபுரம் கரையடி விநாயகா் கோயில் பகுதியில் சேத்தூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த, சுந்தரநாச்சியாா்புரம் பகுதியைச் சோ்ந்த இன்னாசி ஆட்டோவை முந்திச் செல்லும்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில், சுந்தரநாச்சியாபுரம் பகுதியைச் சோ்ந்த அந்தோணி என்பவரது மகன் இன்னாசி (41) சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். இவருடன் வந்த ரத்தினசாமி என்பவரது மகன் மரிய ஜோசப் ( 35) பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இந்த விபத்து நடப்பதற்கு முன்பாக காலையில் அப்பகுதி மக்கள் இந்த சாலையில் பள்ளங்கள் அதிகமாக உள்ளதால் விபத்தை தடுக்கும் விதமாக தடுப்புகள் வைக்க வேண்டும் என போலீஸாருக்கு கோரிக்கை வைத்துள்ளனா். மாலையில் விபத்து நடந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தென்காசி சாலையில் கரையடி விநாயகா் கோவில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா் . இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் உடனடியாக தடுப்புகள் வைத்து பள்ளங்களை சரி செய்ததால் மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.