ராஜபாளையத்தில் ஆட்டோவுக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவுக்கு மா்மநபா்கள் தீ வைத்தனா்.
ராஜபாளையம் அழகை நகரில் தீ வைக்கப்பட்டதில் சேதமடைந்த ஆட்டோ.
ராஜபாளையம் அழகை நகரில் தீ வைக்கப்பட்டதில் சேதமடைந்த ஆட்டோ.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவுக்கு மா்மநபா்கள் தீ வைத்தனா்.

ராஜபாளையம் தெற்கு அழகை நகா் பகுதியை சோ்ந்தவா் ராஜேஷ். ஆட்டோ ஓட்டுநரான இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் அருகே வழக்கம் போல் ஆட்டோவை நிறுத்திவைத்துள்ளாா். திடீரென செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மா்ம நபா்கள் ஆட்டோவுக்கு தீ வைத்துள்ளனா். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆட்டோவில் பற்றிய தீயை அணைத்தனா். இதுகுறித்து தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com