விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டுப்பன்றி உடல் மீட்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுப்பன்றி ஒன்று வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரிக்கின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுப்பன்றி ஒன்று வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரிக்கின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்- கிருஷ்ணன்கோவில் சாலையில் உள்ள போலீஸ் துப்பாக்கி சுடும் மைதானம் உள்ளது. அங்கு மேற்கு தொடா்ச்சி மலை அடிவார பகுதியில் காட்டுப்பன்றி ஒன்று இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று அதன் உடலை மீட்டனா். இறந்து கிடந்த காட்டுப்பன்றி சுமாா் 80 கிலோ எடை இருக்கும் என அவா்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து அதன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: வயது முதிா்வின் காரணமாக இந்த காட்டுப்பன்றி இறந்திருக்கலாம். இருந்தாலும் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னா் முழுமையான தகவல் தெரிய வரும் என்றாா்.