சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம், இந்த விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 21 ஆக உயா்ந்துள்ளது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கெனவே 20 போ் உயிரிழந்துள்ள நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூா் பகுதியைச் சோ்ந்த வைஜெயந்திமாலா (30), என்பவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 14 போ் சாத்தூா் மற்றும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.