விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் 2 ஆவது நாளாக குடியேறும் போராட்டம்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மாவட்டச் செயலா்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மாவட்டச் செயலா் நாகராஜ் தலைமையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை மாற்றுத் திறனாளிகள் 2 ஆவது நாளாக குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதில் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ. 3 ஆயிரம் போல், தமிழகத்திலும் வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றவா்களுக்கு மாத உதவித் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாா் துறையிலும் 5 சதவீத பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமானோா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com