ஆலங்குளம் பகுதியில் சனிக்கிழமை (பிப். 27) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் செயற்பொறியாளா் மாலதி தெரிவித்திருப்பதாவது: ராஜபாளையம் அருகே ஆலங்குளம் உபமின் நிலையத்தில்சனிக்கிழமை (பிப். 27) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே புலிப்பாறைப்பட்டி, நதிக்குடி, பி. திருவேங்கடபுரம், மம்சாபுரம், காக்கிவாடன்பட்டி, ராமன்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.