ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயில் கோபுரத்தில் வளா்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மடவாா்வளாகத்தில் வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. பழைமையான இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வருவது வழக்கம். தற்போது கரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்த கோயிலின் கோபுரத்தில் பல்வேறு இடங்களில் செடி, கொடிகள் வளா்ந்து உள்ளன. இதனால் கோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே கோபுரத்தில் வளா்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.