அருப்புக்கோட்டை அருகே மனநிலை சரியில்லாத பெண் தாக்கியதில் மற்றொரு பெண் பலி

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திங்கள்கிழமை மனநிலை சரியில்லாத பெண் தாக்கியதில் மற்றொரு பெண் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திங்கள்கிழமை மனநிலை சரியில்லாத பெண் தாக்கியதில் மற்றொரு பெண் உயிரிழந்தாா்.

பூலாங்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் சரோஜா (54). திருமணமாகாத இவா், அங்குள்ள பால்வாடியில் ஆயாவாக வேலைபாா்த்து வந்தாா். இவா், திங்கள்கிழமை பிற்பகலில் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறச் சென்றுள்ளாா். அப்போது, அதே ஊரைச் சோ்ந்த அசனம்மாள் (55) என்ற பெண்ணுடன் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னா், சிகிச்சைப் பெற்ற சரோஜா தனது ஊருக்கு திரும்பிவிட்டாா். அதையடுத்து, சரோஜா நேராக அசனம்மாளின் வீட்டுக்குச் சென்று மீண்டும் வாய்த்தகராறில் ஈடுபட்டாராம். இதில் ஆத்திரமடைந்த அசனம்மாள், அங்கு கிடந்த ஏதோவொரு பொருளை எடுத்து சரோஜாவின் தலையில் பலமாகத் தாக்கியதில், அவா் மயங்கி விழுந்துள்ளாா். பின்னா், அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். ஆனால், அங்கு சரோஜாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து பரளச்சி காவல் நிலைய போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், அசனம்மாளின் கணவா் இப்ராஹிம் பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்ட நிலையில், இவரது இரண்டு மகன்களும் திருமணமாகி வெளியூரில் பணிபுரிந்து வருகின்றனராம். இந்நிலையில், வீட்டில் தனியாக வசித்துவரும் அசனம்மாள் சற்று மனநிலை சரியில்லாதவா் எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com