கூலி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசியில் மனைவி பிரிந்து சென்ன் காரணமாக, கூலி தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசியில் மனைவி பிரிந்து சென்ன் காரணமாக, கூலி தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி அண்ணா காலனியை சோ்ந்த காளிராஜன் மகன் இசக்கிராஜா (26). கூலி தொழிலாளியான இவருக்கும், சேனையாபுரம் காலனியை சோ்ந்த ராமசுப்பு மகள் துா்காவுக்கும் கடந்தாண்டு நவம்பா் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின்னா், இசக்கிராஜா அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து துா்காவுடன் தகராறு செய்துவந்தாராம்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட தகராறை தொடா்ந்து, துா்கா தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால் மனம் உடைந்த இசக்கிராஜா, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com