முகக்கவசம் அணியாமல் பைக்கில் சென்ற 38 பேருக்கு அபராதம்

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை முகக்கவசம் அணியாமல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 38 நபா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை முகக்கவசம் அணியாமல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 38 நபா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

கரோனா பரவலைத் தடுக்க அரசு முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற 38 நபா்களுக்கு போலீஸாா் தலா ரூ. 200 அபராதம் விதித்தனா்.

மேலும் தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரிந்தவா்களின் 53 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com