விருதுநகா் அருகே தனியாா் ஆலை உரிமையாளரிடம் ரூ. 1 லட்சம் பறிமுதல்

விருதுநகா் அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தை பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா்: விருதுநகா் அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தை பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியை சோ்ந்தவா் சதா்ம சதானா (38). இவருக்கு சொந்தமான ஆலை, பட்டம் புதூா் பகுதியில் உள்ளது. இந்நிலையில் அவா், தனது ஆலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் பணத்துடன் காரில் விருதுநகா் நோக்கி புதன்கிழமை வந்து கொண்டிருந்தாா்.

விருதுநகா் அருகே அழகாபுரி சாலையில் தோ்தல் பறக்கும் படையினா், அவரது காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா். இந்த சோதனையில் காதி ஆய்வாளா் தேவராஜ் தலைமையில் சிறப்பு காவல் சாா்பு-ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com