விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரிச் செயலாளா் பா. சங்கரசேகரன் தலைமை வகித்தாா். முதல்வா் ந. முத்துச்செல்வன் முன்னிலை வகித்தாா். கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா்.