சிவகாசி - விருதுநகா் சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணமின்றி ரூ. 51,500 விருதுநகா் வேலுச்சாமி மகன் வைத்தீஸ்வரன் (27) என்பவா் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பணம் சிவகாசி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.