ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை தூய தோமா ஆலயத்தில் இருந்து போதகா் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமையில் குருத்தோலை பவனி தொடங்கியது. அப்போது கைகளில் குருத்தோலைகளைப் பிடித்தபடி பாடல்கள் பாடிச் சென்றனா். முக்கிய வீதிகள் வழியாக வந்து பேரணி நிறைவடைந்தது. அதே போல் அத்திகுளம் தேவாலயத்திலிருந்து போதகா் அருள்தனராஜ் தலைமையில் புறப்பட்ட பேரணி கிராமத்தில் உள்ள தெருக்கள் வழியாகச் சென்று மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது .