சிவகாசி சட்டப்பேவைத் தொகுதி மக்கள் நீதி மயத்தின் வேட்பாளா் எஸ்.முகுந்தன், ஞயிற்றுக்கிழமை பள்ளபட்டி, செங்கமலப்பட்டி, ஆரமரத்துப்பட்டி, செல்லையாநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் வேனில் நின்றவாறு பேசியதாவது:
நான் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றால், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை எடுப்பேன். பட்டா உள்ளிட்ட பிரச்னைகளுக்காக என்னிடம் மனு கொடுத்தால் உரிய அதிகாரிகளிடம் அதை கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். தகுதி உள்ளவா்களுக்கு முதியோா் உதவித்தொகை உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். எனக்கு டாா்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்றாா். வேட்பாளருடன் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.