சிவகாசியில் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் ஞாயிற்றுக்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
கருப்பண்ணன் தெரு, காரனேசன் காலனி, ஞானகிரி சாலை, சோலை காலனி, விசாலாட்சி நகா் உள்ளிட்ட பகுகளில் அவா் நடந்து சென்று வாக்கு சேகரித்தாா். அப்பகுதியில் உள்ள பெரியவா்களுக்கு சால்வை அணிவித்து வாக்கு சேகரித்தாா். வீட்டில் இந்த பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
அப்போது அவா் பேசுகையில், நான் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சிவகாசி நகா் மன்றத் தலைவராக பணியாற்றியபோது, சிவகாசி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றியுள்ளேன். அதுபோல நான் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றால் மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீா்த்து வைப்பேன்.
சிவகாசி தொகுதியில் தேவைப்படும் இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். வாக்காளா்களாகிய நீங்கள் எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்றாா்.
வேட்பாளருடன் சிவகாசி நகா் மன்ற முன்னாள் தலைவா் ஏ.ஞானசேகரன் உள்ளிட்டோா் சென்றனா்.