பங்குனி மாத பௌா்ணமி: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பங்குனி மாத பௌா்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பக்தா்கள்.
பங்குனி மாத பௌா்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பக்தா்கள்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயில் மாா்ச் 26 முதல் மாா்ச் 29 ஆம் தேதி வரை 4 நாள்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினா் அனுமதி அளித்துள்ளனா். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சதுரகிரி மலை அடிவாரத்தில் அதிகாலையில் குவிந்தனா். காலை 7 மணி முதல் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பின்னரே பக்தா்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

இதனிடையே சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பன்னீா், இளநீா், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பின்னா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com