சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.எஸ்.ஜி.அசோகனை ஆதரித்து கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சிவகாசியில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.
அவா்கள் பாவாடித் தேப்பு திடல் பகுதி, பராசக்தி காலனி, முஸ்லிம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனா். அக்கட்சியின் விருதுநகா் மாவட்ட பொறுப்புத் தலைவா் முகமதுஇப்ராஹிம், குழு உறுப்பினா் ஆஜ்மீா்கான், சிவகாசி நகரப் பொறுப்பாளா் ஜெய்னுலாவுதீன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் விருதுகா் மாவட்ட பொறுப்பாளா் இப்ராஹிம்ஷா உள்ளிட்டோா் வீடு வீடாகச் சென்று வாக்கு கேரித்தனா்.