விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி புதன்கிழமை கரோனா பரிசோதனை செய்துகொண்டாா்.
பிரசாரத்தின்போது, வட்டாட்சியா் அலுவலகம் அருகே சோதனைச் சாவடி பகுதியில் சுகாதாரத் துறை அதிகாரிகள், அமைச்சரின் காரை நிறுத்தி அமைச்சருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். இதில் அமைச்சரின் கபம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.