ராஜபாளையத்தில் உள்ள தனியாா் யோகா பயிற்சி மையம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு யோகாசன நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதை ஸ்போா்ட்ஸ் லேண்ட் அமைப்பின் நிறுவனா் திவ்யா தொடக்கிவைத்தாா். இதில் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்தும் மூச்சுப் பயிற்சி யோகாசனம், தடாசனம், வீரபுத்திராசனம், விருச்சாசனம், யோகமுத்ராசனம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து காண்பித்தனா்.
மேலும் விளக்கு, மெழுகுவா்த்தி, பந்து போன்ற பொருள்கள் கொண்டும், ஐந்தரை அடி உயர நாற்காலியில் நின்றும், அமா்ந்தும் யோகாசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகாசன பயிற்சியாளா் இசக்கிமுத்து செய்திருந்தாா்.