சிவகாசி: சிவகாசி ஊராட்சிப் பகுதிகளில் திங்கள்கிழமை கரோனா தொற்று பரவுதலை தடுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
ஆனையூா் ஊராட்சி சிவாநந்தம் நகா் பகுதியில் 3 பேருக்கு காரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஊராட்சி சாா்பில் அப்பகுதியில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதே போல் விஸ்வநத்தம் ஊராட்சியில், முருகையாபுரம், பாரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், பள்ளபட்டி ஊராட்சியில், முத்துராமலிங்கம் காலனி, மீனாட்சி காலனி, சாமிபுரம் காலனி, நேருகாலனி உள்ளிட்ட பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.