விருதுநகர்
முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம்
அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை மாலை வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை மாலை வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
அப்போது வாகனங்களின் பின்னால் அமா்ந்து முகக்கவசம் அணியாமல் வந்தவா்களை நிறுத்தி போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் முத்துராமலிங்கம் கரோனா தொற்றால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறினாா். இந்த தொடா் நடவடிக்கையால் முகக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகனஓட்டிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருவதாகவும், தொற்று பரவும் வாய்ப்பும் படிப்படியாகக் குறையும் எனவும் போக்குவரத்துக் காவல்துறையினா் தெரிவித்தனா்.